வெள்ளி, 27 ஜூலை, 2012

மேலப்பாளையத்தில் மாப்பிள்ளை ஊர்வலம்

         மேலப்பாளையத்தில் ஒரு ஆண்மகனுக்கு  கல்யாண தேதிமுடிவு செய்தவுடன் "கூட மாட ஓட"புள்ள குட்டி பெத்தெடுத்த பக்கத்து வீட்டு,அல்லது வட்டாரத்து முன்னாள் மாப்பிள்ளையைமாப்பிள்ளைக்குதோழனாகத்தேர்ந்து எடுப்பார்கள்.அவனுக்கு மாப்பிள்ளைத் துணை என்றும் மாப்பிள்ளை தோழமை என்றும் பெயர்.பெரும்பாலான மாப்பிள்ளைகள்  வரதட்சணை வாங்கித்  தான் கல்யாணம் செய்வார் வார்கள் வரதட்சணை என்பது பெரிய அளவில் பணமாக இருக்காது. ஆனால்  மறுவீடு எத்தனை கலம்,?மாப்பிள்ளை பசியாற எத்தனை கலம்?.மாப்பூட்டுக்கு  எத்தனை கலம் கொடுத்து விடுவீர்கள்? என்று பலவிதமான கலகக் கேள்விகள் எல்லாம் கேட்டு அதன்பிறகு தான் பணம் நகை பற்றி பேசுவார்கள் . 
இந்த கொடுமைகள் எல்லாம் தாண்டிஅப்போதே மஹர் கொடுத்து மணம்முடித்த மாவீரர்களும் உண்டு.
            மாப்பிள்ளைகாரும் ஊர்வலமும்
            மாப்பிள்ளை வீட்ட்டுப்  பந்தலில்  மைக் செட் குழாய்கள் கட்டி ரிக்கார்டு பிளயர் பாட்டு ஏழுநாட்கள் போடுவார்கள். மாப்பிள்ளைதுணையை அழைத்து "நீதான் அவனுக்குத் துணை. செலவுக்கு இந்தா வைத்துகொள்" என்று தொகையை  கொடுத்து விடுவார்கள்.
ருபாய் வாங்கியதும் அந்த மாப்பிள்ளைத்துணை  மாப்பிள்ளையிடம் "இனிமேல் என்னை கேட்காமல் ஏதும் செய்யகூடாது என மாப்பிளைக்கு தடைபோட்டு விடுவார். 


          பெரும்பாலும் கல்யாணங்கள் இரவில் நடக்கும் இரவுகல்யாணங்கள் பார்பதற்கு அற்புதமாக இருக்கும் காரணம் மாப்பிள்ளை கார் ஒளிவெள்ளத்தில் மிதந்து வரும் அழகைபார்ப்பதற்கு என்றே ஆண்மக்களும்,பெண்மக்களும் தங்களது தூக்கத்தை மறந்து காத்துகொண்டு இருப்பார்கள் 
      துணைக்கு ஒரு உதவியாளர் போட்டுகொள்வர் அவருக்கு பெயர் அசிஸ்டெண்ட்துணை திங்கள்கிழமையே மாப்பிளைக்கு புது துணிமணிகள் துணைகளுக்கும் உண்டு மாப்பிள்ளைக்கு புதிய செருப்பு சோப்பு சோப்புகேஸ் எல்லாம் புதிதாக வாங்கிகொள்வார்கள் பெண்னுக்கு ரகசியசாமான் வாங்கிகொடுப்பார்கள் புதிய சட்டை தையித்து வாங்கி விடுவார்கள் சனிக்கிழமையன்று மாப்பிளை நட்பு வட்டாரத்தை பொறுத்து நண்பர்கள் இருபது அல்லது ஐம்பது முதல் நூறுபேர் வரை அழைப்பு கொடுத்துவிடுவார்கள். 
          கல்யாண காலையில் அனைவரும் ஆளுக்கு ஒரு சைக்கிளில் வந்துவிடுவார்கள் அதற்கு முன்னாள் கொட்டு(பேண்டு வாத்தியம்) காரர்கள் வந்துவிடுவார்கள் மாப்பிள்ளைதுணை அவர்களிடம் சென்று கொட்டு அடிக்க சொல்லுவர் கால்மணிநேரம் கொட்டு அடித்து விட்டு மாப்பிள்ளை கார் வந்துவிடும் பெரும்பாலும் பகல் கல்யாணம் அம்பாஸிடர்கார் தான் வரும் ஜோடனை கார் உள்ளது அது இரவுகல்யாணம் என்றால் அந்த காரில் லைட்செட் போட்டு ஜோடித்து கொண்டுவருவார்கள்
மச்சான்மார்களின் கோபம்
            மாப்பிள்ளை ஜோடிக்க வட்டாரவழி சொந்தங்கள் முக்கியமாக கொந்து தலைவர்கள் அனைவரும் வீட்டில் வந்து அமர்ந்து விடுவார்கள் வீடு பரபரப்பாக காணப்படும் என்னவென்று கேட்டால் அவமச்சான் அந்தபுள்ள மாப்பிள்ளை வரலை என்பார்கள் உடனே மாப்பிள்ளை துணை ஸ்டைலாக சைக்கிளை எடுத்துகொண்டு பார்க்க சென்று விடுவார் அங்கே மச்சான்காரன் தன்னுடைய பவரை காட்டும்முகமாக ஆவ்லாதி சொல்வான் உடனே திரும்ப வந்து மாப்பிள்ளையை அழைத்துகொண்டு செல்வார் செல்லும்போதே மாப்பிள்ளையிடம் என்னப்பா நான் உன் மச்சானிடம் என்னோமெல்லாம் சொல்றனோ அதையெல்லாம் நி ஆமாங்கோ ஆமாங்கோ என்று மட்டும் சொல்லணும் வேறு எந்த பேச்சும் பேசக்கூடாது நான் சொல்லிபுட்டேன் என்றே போய் சேர்ந்து இருவரும் சேர்ந்து தாங்கி தடுக்கி அல்லாஹ் ரசூல்காக மன்னித்து கொள்ளுங்கள் மச்சான் நீங்க வந்தான் நான் போவேன் என்றவாறு பேசி கூப்பிட்டு வருவார்கள். 
          மாப்பிள்ளை வீடு பரபரப்பாக இருக்கும் மாப்பிள்ளை தாயார் வாப்பா சகோதரிகள் அனைவரும் வாசலில் நின்றுகொண்டு மச்சானை எதிர்பார்பார்கள் மச்சான்காரன் மாப்பிள்ளை மற்றும் தோழர்கள் புடைசூழ சைக்கிளில் வருவதை பார்த்து வந்துவிட்டார் வந்துவிட்டார் என்று சந்தோசம் பொங்க மச்சானை அனைவரும் வாசலில் வரவேற்று உள்ளே சென்று ஜோடிப்பார்கள் (எனக்கு தெரிந்து மாப்பிள்ளை மாலையும் கையில் பூசெண்டு வைத்துகொண்டு தாய்,தகப்பன் காலில் விழுவதை பார்த்து இருக்கிறேன்)
பைகளில் பீடாவும் எல்லாவகை சிகரெட்டும்
        மாப்பிள்ளை துணை தனது அசிடன்டிடம் மூன்று துணிபைகளை (பெரியது) கொடுப்பார் ஒன்றில் சாதாபீடா,இரண்டாவது பையில் ஸ்பெஷல் பீடா மூன்றாவது பையில் அனைத்துவகை சிகரெட் பாக்கெட்கள்,பீடிபண்டல்கள் இருக்கும் மூன்றுபைகளும் காரில் பின்புறம் வைத்து அதற்க்கு ஒரு சிறுவனை காரினுள் காவல்போட்டுவிடுவார்கள் மாப்பிள்ளைக்கு துணை புதிய செருப்பை போடசொல்லுவார் 
       ஸ்பெஷல்பீடாவை எடுத்து மாப்பிள்ளைக்கு கொடுத்து நான் சொல்லிகொடுத்ததுபோல் சாப்பிடவேண்டும் வாயில்போட்டுகுழப்பகூடாது ஸ்டைலாக மென்று சவித்து சாப்பிடவேண்டும் என்று கொடுப்பார் 
       கொட்டுஅடித்து காரில் ஏற்றுவார்கள் காரில் மாப்பிள்ளை முன்சீட்டில் அமர்ந்துகொண்டு பீடா சாப்பிட்டுகொண்டே இருப்பார் மூன்று கர்சிப்பில் பான்ஸ்பவுடர் தட்டி துணை தனது கையில் வைத்து கொண்டு மாப்பிள்ளைக்கு அப்பப்ப டச்சப் கொடுப்பார் கொட்டுஅடித்துக்கொண்டு முன்னாள் செல்வார்கள் கார் ஆமைவேகத்தில் ஊர்ந்து செல்லும் நண்பர்கள் காரின் இருபக்கங்களிலும் அவர்களுக்கு பிடித்த பாட்டை கொட்டுகாரர்களிடம் அடிக்க சொல்லி நடந்து வருவார்கள் அனைவருக்கும் ஜங்ஷன் சீனத்பரிமளம் ஸ்டோரில் வாங்கிய ஜன்னத்துல் பிர்தௌஸ் செண்டு மற்றும் பீடா கொடுத்துவிடுவார் மாப்பிள்ளை கார் செல்லும் போதே ஒவ்வொரு வீட்டிலும் காளிமார்க் கலர் குடிக்ககொடுப்பார்கள் மாப்பிள்ளை அதை ஒருமுடக்கு அல்லது இரண்டு முடக்கு குடித்துவிட்டு துணையிடம் கொடுத்து விடுவார் துணை கொஞ்சம் நண்பர்கள் கொஞ்சம் என வரக்கூடிய கலர் மற்றும் பாலை குடிப்பார்கள் மாப்பிள்ளை தெரு முடிந்ததும் பெண்வீட்டிற்கு கார் ஊர்ந்து செல்லும் பீடாசப்ளை தெருவில் உள்ள முக்கியமான நபர்களுக்கு சாதா ஸ்பெஷல் என துணை பந்தாவாக கொடுத்துகொண்டே வருவார் தெரு ரோடு என் கார்சுற்றி இறுதியாக பெண்வீட்டு தெருவிற்கு வரும் போது துணை மாப்பிளைக்கு தொப்பியை கழற்றி தலைவாரி ஸ்பெஷல்பீடா கொடுத்து பௌடர்டச்சப் கொடுத்து உள்ளே செல்லுவார்கள் 
            மாப்பிள்ளையை பார்க்க தெருவே ஆர்வமாக திருணையில் கூடிநிற்பார்கள் உள்ளே பெண்ணின் சொந்தங்கள் கிளாசில்பாலை வைத்து கொண்டு காத்துஇருப்பார்கள் மாப்பிள்ளை ஓவ்வொரு வீடாக பால் குடித்துவிட்டு மாப்பிள்ளைக்கு உச்சா கண்டிசனில் பெண்வீடு வந்து விடும் நண்பர்கள் பெண்வீட்டுதெருவின் இருசைடிலும் பீடா கொடுத்து நிக்காஹ்விற்கு வாருங்கள் என்று அழைத்துகொண்டு வருவார்கள் பெண்வீட்டில் மாப்பிள்ளை இறங்கும்போது கொட்டின் வேகமும் தாளமும் மாறுபடும்

கால்கழுவுவதற்கு மோதிரம்
            மாப்பிள்ளை காரில் இருந்து துணைதான் இறக்கிவிடுவார் இறங்கியவுடன் பெண்ணின் சகோதரன் (மைத்துனன்) புதுசெம்பில் தண்ணீர் வைத்து மச்சானுக்கு கால்கழுவ விடுவான் காலைகழுவியதும் துணை கொடுக்கும் மோதிரத்தை மைத்துனனுக்கு போடுவார் கத்தீப்லெப்பை வந்தவுடன் நிக்காஹ் ஆரம்பம் ஆகும் (கத்தீபிற்கு தெருக்களில் கல்யாணம் அதிகமாக இருந்தால் மாப்பிள்ளை ஒருமணி அல்லது இரண்டுமணி நேரம் காத்துஇருக்கவேண்டும்) பின்பு தாலிகட்டியவுடன் மணமக்களின் இரு கரங்களை கர்சீப்பால் மறைத்து கட்டி ஹாண்ட்சேக் கொடுக்க வைப்பார்கள்.வந்தது போல பெண்ணை மட்டும் காரில் ஏற்றி கொண்டு ஒத்தடிகொட்டு அடித்து மாப்பிள்ளை வீட்டுக்கு வந்தவுடன் நண்பர்கள் புடைசூழ மாப்பிள்ளை டி அல்லது கூல்டிரிங்க்ஸ் குடிக்க செல்வார். கல்யாணம் முடிந்த ஏழுநாட்கள் துணை சொல்லை மீறக்கூடாது அன்று மாலை துணை நண்பர்கள் புடைசூழ ஷங்ஷன் அரசன் பேக்கரியில் ஏழுநாட்களுக்கும் தனக்கும் சேர்த்து அவர்நினைப்பதை வாங்கிகொடுப்பார் இன்றும்கூட அந்தபழக்கம் இருந்து வருகிறது.
ஏழாம்நாள்முழுக்கும் சினிமாதியேட்டரும்
             மாப்பிள்ளையை அதிகாலையில் மாப்பிள்ளைதுணைதான் கதவை தட்டி ஆற்றிற்கு குளிக்க கூப்பிட்டு செல்வார் ஏழாவது நாள் அன்று பெண்ணின் சகோதரர்களை ஆற்றிற்கு நண்பர்கள் புடைசூழ வேனில் அழைத்து செல்வார்கள் ஆற்றில் மச்சான் மைத்துனனுக்கு எண்ணெய் தேய்த்து குளிப்பார்கள் அன்று மதியம் மாப்பிள்ளை வீட்டில் தான் விருந்து மாலை நான்கு மணிக்கு கார் அல்லது பஸ்ஸில் மைத்துனரை சினிமா பார்க்க அழைத்து சென்று இரவில் தாஜ் அல்லது ஜன்னத் ஹோட்டலில் சாப்பிட்டு அரசன் பேக்கரியில் ஸ்வீட் பாக்ஸ் வாங்கி வருவார்கள்
மறுவீடு சாப்பாடு
                 மறுவீடு சாப்பிட மாப்பிள்ளை நண்பர்களோடு சைக்கிளில் ஊர்வலமாக சுமார் ஐம்பது அல்லது அதற்க்கு மேல் வருவார்கள் துணைகையில் அதே போன்று இரண்டு பைகள் இருக்கும் மறுவீடு சாப்பாட்டிற்கு ஸ்பெஷல் பீடா மட்டும் தான் வழக்கமாக சிகரெட் துணை பெண்வீட்டில் உள்ளவர்களுக்கு பீடாவை வழங்கி விடுவார் சாப்பாடு ஸ்பெஷல் லாக இருக்கும் கூல்டிரிங்க்ஸ் எல்லாமே போதும்போதும் என்கின்ற அளவிற்கு நல்ல கவனிப்பார்கள் சாப்பிட்டு முடித்தும் துணை அனைவருக்கும் பீடா சிகரெட் கொடுப்பார் சிலர் சிகரெட்டை அங்கேயே வைத்து குடிப்பார்கள் பெண்வீட்டை ஒரு வழியாக ஜாலி பண்ணுவார்கள் இப்போது அந்த பழக்கவழக்கம் இல்லை
மாரார், சித்ரா ஸ்டுடியோக்கள்
             புதிய மாப்பிள்ளை பெண்ணை முதன்முதலில் வெளியே ஷங்சனுக்கு அழைத்து செல்ல வேண்டும் இல்லையென்றால் அது மிக குறையாக சொல்லும் காலம் மணமக்கள் மட்டும் அல்லது மைத்துனன் சேர்ந்து செல்வான் முதன்முதலில் மேலே கூறப்பட்ட ஸ்டுடியோ ஒன்றில் சென்று ஜோடியாக போட்டோ எடுப்பார்கள் பின்பு செருப்பு கடைக்கு சென்று பெண்ணுக்கு புது செருப்பு பின்பு சினிமா சென்று படம் பார்த்துவிட்டு இரவில் ஹோட்டல் சென்று சாப்பிட்டுவிட்டு வீடு திரும்புவார்கள்.
               மறுநாள் இரண்டு காப்பி போட்டோ வாங்கி அதை கண்ணாடி கடையில் கொடுத்து பிரேம் போட்டு பெண்வீட்டில் ஒன்றும் மாப்பிள்ளை வீட்டில் ஒன்றும் சுவரில் புதிய ஆணி வாங்கி அடித்து வைத்து பார்த்து பார்த்து மேச்சுவார்கள்.
                 ஒருவேளை பெண் மாமியாரிடம் சண்டைபோட்டுகொண்டால் மாமியார் அந்த போட்டோவை பார்த்துக்கொண்டு கொல்லிமுடிந்துடுவா தாலியரப்பா மூஞ்ச பாரு மூஞ்ச என்று பேசுவதையும் கேட்க முடியும்

மாப்பிள்ளைதுணையின் தோற்றம்
             முழுக்கை சட்டையை முழங்கை வரை மடித்துவிட்டு அதில் ஒரு கர்சீப் சொருகி இருப்பார் அல்லது சட்டை கலரில் வைத்து இருப்பார்.முடிந்த வரை பீடாபைகளை கக்கத்தில் வைத்து இருப்பார் அல்லது பீடா மற்றும் சிகரெட் பையினை கையில் வைத்து இருப்பார்.மாப்பிள்ளையை அடிக்கடி மிரட்டுவார்.பல வித்தைகளை சொல்லி கொடுப்பார்
                1990 அல்லது 1991  களில் இந்த பழக்கவழக்கங்கள் மாறி விட்டது

Mohideen Abdul Jabbar

வியாழன், 26 ஜூலை, 2012

மேலப்பாளையமும் தக்கடியும்

          மேலப்பாளையத்தில் நோன்பு வந்துவிட்டால் சமையல்கலை வித்தகர்களுக்கு ஏகப்பட்ட கிராக்கிகள் காரணம் ஒருபுறம் அனைத்துபள்ளிவசல்களுக்கும் நோன்புக்கஞ்சிகாயிச்சும் பணி காலை ஒன்பதுமணிமுதல் பதினொன்று அல்லது பன்னிரண்டுமணி வரை ஆகிவிடும் அதன் பிறகு நோன்பு திறக்க நாஷ்ட வேலை ஊரில் கல்யாணம் முடிந்து மூன்று ஆண்டுகள் வரை நோன்பு சீர்கொடுக்கும் பழக்கம் இன்று வரை இருந்து கொண்டுதான் வருகிறது ஊரில் எத்தனை மாற்றங்கள் வந்தாலும் சில பழக்கவழக்கங்கள் தொன்றுதொட்டு நடந்துதான் வருகிறது.
         சம்பந்தம் பேசிபோட்டுஇருந்தால் அந்த வருடம் நோன்புசீர் ஓட்டுமாவும் நெய்யும் கல்யாணம் ஆனா முதல் வருடம் என்றால் நோன்பு சீராக வட்டல்ஆப்பம் இடியப்பம்,பனியம் போன்றவை இரண்டாவது வருடம் அதேபோல மூன்றாவது வருடம் கொடுப்பார்கள்
          நோன்புசீரில் தக்கடி, சேமியாபிரியாணி, புரோட்டாசெட்,தோசைகறி , பிரியாணி போன்ற உணவுபொருட்கள் கொடுப்பார்கள்
          தக்கடி அதில் ஒரு சிறப்புவாய்ந்த உணவுபொருள் ஆகும் நெல்மாவுவில் வெங்காயம்,பச்சைமிளகாய்,உப்பு போட்டுகையால் கொலக்கட்டை பிடிபார்கள் அதுவும் நோன்புசீருக்கு என்றால் ஒருகூட்டமே இருந்து கொலக்கட்டைபிடிக்கும் மாவுவிற்கு ஏற்றபடி கறி சேர்த்து தக்கடிகூட்டுஉடன் சாப்பிடுவதற்கு நல்ல சுவையாக இருக்கும்
                        ஊரில் சில வருடங்களாக சஹர் வேளையில் குறைந்தவிலையில் சாப்பாடு கொடுக்கிறார்கள்  இரவே அதற்கான டோகேன் எடுக்க வேண்டும் நெய்சோறு வருவல் கோழிகுழம்பு பருப்புசாம்பார் ருபாய்110 சன்கேட்டரிங்,ஹோட்டல் பீமா,ஹோட்டல்தாஜ் போன்றவர்கள் நடத்துகிறார்கள்
           பைபாஸ் ருசி ஹோட்டலில் சஹர நேர சாப்பாடு சுடசுட இலவசமாகவே கொடுக்கிறார்கள்