தலைமையாசிரியர் நல்லாசிரியர் மரியாதைக்குரிய
ஷேர் அலி கான் அவர்கள்
அனைவருக்கும் எங்களது பிளாக்ஸ்பாட் சார்பாக தியாகத்திருநாள் வாழ்த்துக்கள்
மேலப்பாளையம்
முஸ்லிம் மேல் நிலைப்பள்ளியின் வரலாற்றில் தனி முத்திரை பதித்த நல்லாசியர்.
திருச்சியில் சார் அவர்களை அவரது இல்லத்தில் சந்தித்த போது அந்த பெயருக்கு
ஏற்றார்போல் பொருத்தமாகவே காட்சியளித்தார்.
உருது
மொழியில் ஷேர் என்றால் சிங்கம்
சார்
அவர்கள் நடந்து வரும் அழகு சிங்கம் வருவது
போலவே கம்பீரமாகத்தான் இருக்கும்.

காலையில் பிரையர் நடக்கும் போது ஐந்து நிமிடங்கள் தினந்தோறும்
மாணவர்களிடத்தில் நல்ல போதனைகள் செய்வதும்,நன்கு படிக்கும் மாணவர்களையும்
விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்று கோப்பைகள் வாங்கி வரும் மாணவர்களையும் அந்த
நேரத்தில் அனைவரின் முன்னிலையில் பெருமைபடுத்தி பாராட்டி பேசி மற்ற மாணவர்களையும்
ஊக்குவிப்பதும் சார் அவர்களின் சிறந்த பண்புகளாகும்.
காலையிலும் மதிய வேளையிலும் வகுப்பு ஆரம்பித்த உடன் தலைமையாசிரியர் அறையில்
இருந்து கம்பீரமாக நடந்து அனைத்து வகுப்பிலும் நடக்கும் படங்களை கண்காணித்த படியே
நடந்து செல்வார். அவ்வாறு செல்லும் போது எந்த வகுப்பிலாவது அந்த வகுப்பு ஆசிரியர்
விடுமுறையில் இருந்தால் அந்த வகுப்பறைக்கு சென்று மாணவர்களிடம் அன்பாக பேசி
மகிழ்வது அவர்களின் தனி சிறப்பாகும். ஒரு முறை சார் அவர்கள் நடந்து வரும் போது
வகுப்பறையில் பாடம் எடுத்து கொண்டு இருந்த மைதீன் லெப்பை சார் அவர்கள் வெளியே
வந்து சார் அவர்களிடம் என்ன சார் உடல் நிலை சரியில்லையா என கேட்டார்கள் அதற்கு
சார் அவர்கள் எப்படி கண்டு பிடித்தீர்கள் என கேட்டபோது சார் நீங்கள் நடந்து வரும் போது பார்பதற்கு கம்பீர
தோற்றமளிக்கும் இன்று அந்த தோற்றம்
உங்களிடத்தில் இல்லை ஆகவே கேட்டேன்
என்றார்கள். ஆம் இன்று எனக்கு உடல் நிலை சரியில்லை தான் அந்த அளவிற்கு பணி காலத்தில்
ஓய்வு இல்லாமல் சுறுப்பாக பணியாற்றிய பெருமைக்கு சொந்தகாரர். பொதுவாக தலைமையாசிரிய
பணி ஓய்வில்லாத பணியே ஆகும்.
சார் அவர்களின் பணிகாலத்தில் தான் பத்தாம்வகுப்பு மற்றும் பனிரெண்டாம்
வகுப்பு மாணவர்களுக்கு இரவு படிக்கும் முறையை நடை முறைக்கு கொண்டு வந்து சிறப்பாக
நடத்தினார். மாலையில் பள்ளிகூடம் முடிந்த உடன் நைட் ஸ்டடி ஆரம்பமாகும். மாணவர்கள்
கண்காணிக்க ஆசிரியர்கள் இருந்தாலும் சார் அவர்களும் கண்காணித்த படி அங்கும்
மிங்கும் வலம் வந்து மாணவர்களை படிக்க ஆர்வமூட்டி வருவார்.
விளையாட்டு தினத்தை கோலாகலமாக கொண்டிட
வழிவகுத்தவர். ஸ்போர்ட்ஸ் டே மிக சிறப்பாக பல முக்கிய பிரமுகர்கள் மாவட்ட
ஆட்சிதலைவர், மாவட்ட காவல் துறை அதிகாரிகளை விழாவிற்கு அழைத்து வந்த பெருமை சார்
அவர்களையே சாரும். விளையாட்டில் ஆர்வமுள்ள மாணவர்களை ஊக்குவிப்பதும் அவர்கள் மீது
தனி கவனம் செலுத்தி ஆலோசனைகள் கூறுவதும் அவரது தனி சிறப்பிலும் ஒன்றாகும். சார்
அவர்களின் பணிக்காலத்தில் பள்ளிகூட கட்டிடங்கள் வளர்ந்து கொண்டு வந்தது என
கூறலாம்.
கல்வி சுற்றுலாவிற்கு
முக்கியத்துவம் கொடுத்தது மாணவர்களை அழைத்து செல்வதும். ஆசிரியர்களை அழைத்து பள்ளி
வரலாற்றிலே முதன் முதலாக ஆல் இந்தியா சுற்று பயணம் மேற்கொண்டதும் சார் அவர்களின்
பணிக்காலத்தில் தான். குறிப்பாக ஜெய்ப்பூர், டெல்லி, ஆக்ரா மற்றும் சுற்றி உள்ள
இடங்களை பார்வையிட்டு வரும் போது போகும் போதும் நாக்பூரில் ஓவிய ஆசிரியர் ரஹ்மான்
சார் அவர்களின் சம்மந்தி கடும் மழையிலும் அனைத்து ஆசிரிய பெருமக்களுக்கு சூடான
பிரியாணியும் சூடான அல்வாவும் கொடுத்தது உபசரித்ததை மேலப்பாளைய மக்கள் உபசரிப்பில்
உயர்ந்தவர்கள் என்ற சிந்தனையையும் நன் மக்கள் என்ற எண்ணத்தையும் வரவழைத்து வாழ்
நாளில் நெஞ்சை விட்டு நீங்காத நிகழ்வாகவே சார் அவர்களுக்கு இருந்தது.
மேலும் சார் அவர்களின் மென்மையான போக்கும், பணியின் தனித் திறமையும் நம்
மக்களின் மீது உள்ள அன்பின் காரணமாகவும் அவர்கள் இல்லத்தில் நடக்கும் அனைத்து
விஷேச காரியங்களில் சிறப்பு விருந்தினராகஅழைக்கப்பட்டு கவுரவிக்க பட்டு
இருக்கிறார்கள். நமதூரின் உணவு வகைகளில் ஒன்றான நெய்சோறு பருப்பு கத்தரிக்காய்
(தால்ச்சா) மட்டன் குருமா அந்த ருசிகளை இன்றளவும் மறக்காமல் சொன்ன விதம் நாம்
தாயார் செய்து கொண்டு வந்து இருக்கலாமோ என்ற எண்ணம் நம்மிடம் வந்தது.
சார் அவர்களை கண்ணியபடுத்தும் விதமாக ஊரில் நிறுவனங்களின் விழாகளுக்கும் கட்டிட திறப்பு விழாகளுக்கும் அழைத்து தலைமை தாங்க வைத்து அழகு பார்த்ததும்.
பள்ளி கூடங்களில் நடக்கும் விழாக்களில் சார் அவர்களை அழைத்து சிறப்பு செய்ததையும் சார்
அவர்கள் இன்றும் நினைத்து பெருமிதம் கொண்டார்கள். சார் அவர்கள் நடந்து தெருக்களில்
செல்லும் போது பெண்கள் எழுந்து நின்று மரியாதை செய்ததையும் வாழ் நாளில் மறக்க முடியாத நிகழ்வே என பெருமிதம் கொண்டார். நான்
மேலப்பாளைய வாசியாக ஆக வேண்டும் என எண்ணம் மேலோங்கியே இருந்தது.
நமதூர் மக்கள் மேல் உள்ள
பிரியத்தின் காரணமாக தனது மகளை தெற்கு மைதீன் ஜமாஅத்தினர நடத்தும் பள்ளி கூடத்தில்
மிக சொற்ப அளவிலான மாத ஊதியம் ருபாய் 300 க்கே பணி செய்ய வைத்தார். அந்த நேரத்தில்
குறைந்த பட்ச சம்பளம் ருபாய் 2500 ஆக இருந்தது. இது சார் அவர்களின் சேவை மனப்பான்மையை
அறிவதற்கு இதுவும் ஒரு உதாரணம் ஆகும்.
சார் அவர்களின் கல்வி பணியினை பாராட்டி 1990-1991 ஆம் ஆண்டு சிறந்த ஆசிரிய பணிக்கான நல்லாசிரியர் விருது
அறிவித்தது. அந்த மகிழ்ச்சி கரமான சந்தோசத்தை ஊரே கொண்டாடியது. சார் அவர்கள்
சென்னையில் விருது வாங்கி ஊர் வந்த போது ரயில்வே நிலையத்தில் உற்சாக வரவேற்பு
அளித்து அழைத்து வந்தார்கள். மாணவர்கள் ஒவ்வொரு வகுப்பு சார்பாக சார் அவர்கள்
வாழ்த்தி சுவரொட்டிகள் ஒட்டி தங்களது மகிழ்ச்சியினை வெளிபடுத்தினர். மேலப்பாளையம்
முஸ்லிம் மேல் நிலைப் பள்ளியின் வரலாற்றில் முதன்முதலில் நல்லாசிரியர் பட்டம்
வாங்கிய பெருமையும் சார் அவ்ர்களியே சாரும்.
பள்ளிகூடத்தில்
சக ஆசிரியர்களோடு நண்பர்கள் போலவே பழகுவார். ஆசிரியபெருமக்களோடு இணைந்து பல
சாதனைகள் புரிந்தார். சார் அவர்களுக்கு நாம் நன்றி கடன் பட்டுள்ளோம். சார்
அவர்களின் சேவைக்கு நம்மை விட நம்முடைய ரப்பே கூலி கொடுக்க சிறந்தவன். இம்மையிலும்
மறுமையிலும் சிறந்த நற்கூலியை வல்ல ரஹ்மான் கொடுப்பானாக ஆமீன். நீண்ட ஆயுளும்
சிறந்த சரீர சுகத்தையும் கொடுக்க அனைவரும் துவா செய்வோம்
Mohideen Abdul Jabbar